நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்

•செப்டம்பர் 29, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் -அன்று
நான் வழி  அறிந்தேன் உன் பாதையில்
நான் எனை அறிந்தேன் உன் அருகிலே
நான் திசை அறிந்தேன் உன் விழியிலே – இன்று
நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே (நான் மொழி)

நல்லதொரு பூவாசம் நானறிந்த வேளையில்
நந்தவனம் போன இடம் நானறியேன்
என்னுடைய ஆகாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நானறியேன்

காற்றை போல வீசியவள் கையை வீசி போனதெங்கே
ஊற்றை போல பேசியவள் ஊமையாகி போனதெங்கே

வாழ்வை மீட்டு கொடுத்தவளே
நீயும் தொலைந்து போனதெங்கே (நான் மொழி)

கண்ணிமையில் ஓர் ஆசை ஊஞ்சல் இடும் வேளையில்
உண்மைகளை உள் மனது காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க ஆசைபட்ட வேளையில்
உன் மடியில் தூங்கும் நிலை நியாமில்லை

மேகம் நீங்கி போகும் என நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழப்போகும் வாழ்க்கையிலே நமது கையில் ஏதுமில்லை (நான் மொழி)

படம் :   கண்டேன் காதலை
இசை :  வித்யாசாகர்
பாடியவர் : சுரேஷ் வாட்கர்

யார் வீட்டில்

•பெப்ரவரி 18, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் கால காட்டில் ஏன் வாடுதோ
மேகம் தன்னில் மேகம் மோதி
மின்னல் மின்னுதோ
மின்னல் இந்த நேரம் எந்தன்
கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ      (யார் வீட்டில்)

ராகங்கள் நூறு அவள் கொடுப்பாள்
கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்
ஜீவன் அங்கே என்னை தேடும்
பாடல் இங்கே காற்றில் ஓடும்
காணாமல் கண்கள் நோகின்றதோ
காதல் ஜோடி ஒன்று
வாடும் நேரம் இன்று
ஓர் ஏழை வெண்புறா மேடையில்
என் காதல் பெண்புறா வீதியில்
பூங்காற்று போல் ஆடவே
பூத்த பூவும் ஆற்றில் ஓடவே  (யார் வீட்டில்)

வான் மேகம் மோதும் மழை தனிலே
நான் பாடும் பாடல் நனைகிறதே
பாடல் இங்கே நனைவதனாலே
நனையும் வார்த்தை கரையுது இங்கே
ஜென்மங்கள் யாவும் நீ வாழவே
காதல் கொண்ட உள்ளம்
காணும் அன்பின் இல்லம்
ஒர் காற்றின் கைகளும் தீண்டுமோ
என் காவல் எல்லையை தாண்டுமோ
நியாங்கள் வாய் மூடுமோ
தெய்வம் இல்லை என்று போகுமோ (யார் வீட்டில் )

படம் : இதயம் ஒரு கோவில்
இசை : இளையராஜா
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

கண்ணா கருமை

•பெப்ரவரி 11, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்

கண்ணா கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை

மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுபோர்முன் படைத்தாய் கண்ணா
இனம் பார்த்து என்னைச்சேர்க்க மறந்தாய் கண்ணா
இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா (கண்ணா கருமை)

பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போன்ற நினைவொன்றை வைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா (கண்ணா கருமை)

படம் : நானும் ஒரு பெண்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் : கவிஞர் கண்ணதாசன்

வானம் கீழே

•பெப்ரவரி 11, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்

வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால என்ன
மாயம் எல்லாம் மாயம்
இதில் மனிதன் நிலை என்ன
வாடா ராஜா வாவா இதில்
முதலும் முடிவும் என்ன (வானம் கீழே )

இரவும் பகலும் எனக்கொரு மயக்கம் (2)
தினமும் மனமும் குதிரையில் பறக்கும்
ஊஞ்சல் போலே என்னுள்ளம் ஆடும்

மேலும் மேலும் வேகம் கூட
மேலும் மேலும் மேகம் கூட
நானும் இங்கே காணும் இன்பம்
இரவும் நிழலும் கடலோ கனவோ (வானம் கீழே )

பறவை மிருகம் அழுவது இல்லை
கவலை கடலில் விழுவது இல்லை
கண்ணீர் பூக்கள் என் வாழ்வில் இல்லை

நானும் கூட பறவை ஜாதி (2)
பழகிப்பார்த்தால் தெரியுது சேதி
தினமும் மனம் போல் திரியும் குருவி (வானம் கீழே )

இசை : இளையராஜா

படம் : தூங்காதே தம்பி தூங்காதே

மழை நின்ற பின்பும்

•பெப்ரவரி 6, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்

மழை நின்ற பின்பும் தூரல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்

எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு பேரும் வைக்கட்டுமா
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா (மழை நின்ற)

நீர்த்துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசையமைக்கும்

பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நானிருந்தும்
தாகமினும் அடங்கவில்லை

பாதம் இரண்டு நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்

மழைத்துளி பனித்துளி கரைந்தபின்னே
அது மறுபடி இரண்டென பிறந்திடுமா  (மழை நின்ற)

கண்ணிமைகள் கைத்தட்டியே
உன்னை மெல்ல அழைகிறதே!
உன் செவியில் விழவில்லையா?
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே!

உன்னருகில் நானிருந்தும்
உண்மை சொல்ல துனிவு இல்லை
கைகளிலே விரலிருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை

உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்.
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்.

தினம் தினம் கனவினில் வந்துவிடு
நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு  (மழை நின்ற)

படம் : ராமன் தேடிய சீதை
இசை : வித்யாசாகர்